Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே… சீரியல்களின் நேரத்தைக் குறைத்த தொலைக்காட்சிகள்!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (08:09 IST)
கொரோனா லாக்டவுன் காரணமாக சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மற்றும் கிழமைகள் குறைக்கப்பட்டுள்ளன.

கொரோனா இரண்டாம் அலை அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் 14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்களும் முடங்கியுள்ளன. இதில் சினிமா படப்பிடிப்புகளும் அடக்கம், இந்நிலையில் சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி கேட்டு பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் அதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் இப்போது எபிசோட் பற்றாக்குறைகளை சமாளிக்க தொலைக்காட்சிகள் திங்கள் முதல் சனி வரை என்று இருந்த ஒளிபரப்பு கிழமைகளை திங்கள் முதல் வியாழன் வரை என்று குறைத்துள்ளன. மேலும் நேரத்தை 24 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்கள் எனவும் குறைத்துள்ளனர். இந்த நான்கு நிமிடத்தை ஈடுகட்ட முந்தைய எபிசோட்களின் கதைசுருக்கம் மற்றும் டைட்டில் பாடல்களை நீட்டிக்க முடிவு செய்துள்ளனராம்.

தொடர்புடைய செய்திகள்

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments