Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தள்ளி போகிறது சின்னத்திரை சீரியல்கள்: சீரியல் பிரியர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (07:09 IST)
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சின்னத்திரை மற்றும் பெரியதிரை படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் ஒருசில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது
 
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் வரும் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது
 
இதனை அடுத்து சின்னத்திரை படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த உள்ளதால் இந்த முழு ஊரடங்கு உத்தரவு முடியும் வரை படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார் 
 
இதனை அடுத்து வரும் 19-ம் தேதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவே இன்னும் ஓரிரு நாளில் புதிய தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது மேலும் தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது. எனவே சீரியல் பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு பழைய எபிசோட்களைத்தான் பார்க்க வேண்டிய நிலை அவர்களுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments