Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் போன்று வரவேற்பு - சூர்யா பெருமிதம்

Webdunia
புதன், 27 மே 2015 (10:46 IST)
தமிழகம், ஆந்திரா, கேரளா மூன்று மாநிலங்களிலும் தனது படத்தை தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறார் சூர்யா. மாஸ் என்கிற மாசிலாமணியின் தெலுங்குப் பதிப்பின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் சூர்யா கலந்து கொண்டார்.
கொச்சியில் இதே படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடந்தது. அதில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் சூர்யா. அப்போது பேசிய அவர்,
 
1997 -இல் நேருக்கு நேர் படத்துக்காக விஜய்யுடன் கேரளா வந்தேன். அப்போது விஜய்க்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து பிரமித்தேன். 17 வருடங்களுக்குப் பிறகு அதேபோன்ற வரவேற்பு எனக்கும் கிடைத்துள்ளது. அதற்காக மலையாள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
 
மாஸ் என்கிற மாசிலாமணி தமிழகத்தில் வெளியாகும் அதேநாள் தமிழ் மொழியில் கேரளாவிலும், தெலுங்கில் ஆந்திராவிலும் வெளியாகிறது.

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

Show comments