Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு சினிமாவில் முதல் நடிகர்… தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜுனுக்கு குவியும் பாராட்டுகள்!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (07:32 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட 69 ஆவது தேசிய விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருது புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகர் விருதைப் பெறும் முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் அல்லு அர்ஜுன்.

இதையடுத்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யா “சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றதன் மூலம் தெலுங்கு திரையுலகில் வரலாறு படைத்துள்ளீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கு கிடைத்த தகுதியான அங்கீகாரம் தேவிஸ்ரீபிரசாத். வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments