Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா 44 எப்ப முடியும்?...வாடிவாசல் எப்ப தொடங்கும்? – தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்த தகவல்!

vinoth
திங்கள், 24 ஜூன் 2024 (07:10 IST)
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், காஸ்ட்யூம் டிசைனராக ப்ரவீன் ராஜாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். வில்லனாக உறியடி விஜயகுமார் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஷூட்டிங் இந்த மாத தொடக்கத்தில் அந்தமானில் தொடங்கியது. அங்கு இடைவேளையே இல்லாமல் தொடர்ச்சியாக ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் செப்டம்பர் மாதத்திலேயே முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

அதனால் அக்டோபரில் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் வாடிவாசல் ஷூட்டிங் தொடங்கும் என தயாரிப்பாளரும் சூர்யாவின் நெருங்கிய நண்பருமான தனஞ்செயன் தெரிவித்துள்ளார். இதனால் இந்த ஆண்டுக்குள் வாடிவாசல் திரைப்படம் தொடங்குவது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments