Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா 45 படத்தில் நடிக்கும் இரண்டு முன்னணி நடிகைகள்… டைட்டில் இதுவா?

vinoth
செவ்வாய், 22 அக்டோபர் 2024 (14:20 IST)
’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’, ’சுல்தான்’, மற்றும் ‘என் ஜி கே’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்து சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

மிகக் குறுகிய கால படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் கங்குவா ரிலீஸான பின்னர் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் மிருனாள் தாக்கூர் மற்றும் ருக்மினி வசந்த் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  ருக்மினி வசந்த் சிவகார்த்திகேயன் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படத்துக்கு ‘கருப்பு’ என்று பெயர் வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பை வைத்துப் பார்க்கும் போது அமானுஷ்ய விஷயங்களைப் பற்றி பேசும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவிடப்பட்டதா விஜய் சேதுபதி & இயக்குனர் ஹரி படம்?

ஸ்டண்ட் இரட்டையர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்?

தயாரிப்பாளர் மாற்றம்… தொடங்கியது ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா4’!

இளையராஜா பயோபிக்கில் இணைகிறதா பிரபல தயாரிப்பு நிறுவனம்?

இரண்டாம் நாளில் வீழ்ந்த அஜித்தின் விடாமுயற்சி வசூல்... இவ்வளவுதானா?

அடுத்த கட்டுரையில்
Show comments