Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ், விஜய் சேதுபதி வரிசையில் இடம்பிடிப்பார் சந்தீப் - இயக்குநர் சுசீந்திரன்

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (18:35 IST)
‘தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் வரிசையில், சந்தீப் கிஷணும் இடம்பிடிப்பார்’ என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.


 

 
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷண், விக்ராந்த், மெஹ்ரீன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசை அமைத்துள்ளார்.
 
நவம்பர் மாதம் 10ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சுசீந்திரன், “சந்தீப் கிஷண், இந்தப் படத்தில் அருமையாக நடித்துள்ளார். நான் அவருடன் ‘ஜீவா’ படத்திலேயே இணைந்திருக்க வேண்டும்.

தமிழில் விஷ்ணு விஷால் நடித்த கேரக்டரில், தெலுங்கில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக அது நிறுத்தப்பட்டுவிட்டது. தனுஷ், விஜய் சேதுபதி போல பி & சி வரிசையில் சந்தீப்பும் இடம்பிடிப்பார்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments