Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரியாதையாக பேசுங்கள்; சுஜாவுக்கும் ஆரவுக்கும் இடையே நடக்கும் சண்டை

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (13:03 IST)
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. டாஸ்க்கின் பெயர் ‘தேவதைகள் மற்றும் பேய்கள்’.  டாஸ்க்கின்படி போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து கொள்ள வேண்டும். ரெட் பெட்ரூமில் ஒரு லாக்கர் இருக்கும். அதற்கான சாவி லிவிங் ரூமில் இருக்கும்.

 
 
பேய் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அந்த சாவியை எடுத்து அந்த லாக்கரை திறக்கவேண்டும். தேவதை கதாபாத்திரமிட்டவர்கள் லாக்கரை பாதுகாக்கவேண்டும் என்பதுதான் டாஸ்க் ஆகும். டாஸ்க் கொடுத்ததோடு காயப்படுத்தாமல்  விளையாடுங்கள் என்றும் அறிவுரை செய்தார் பிக்பாஸ்.
 
இந்நிலையில் தற்போது வந்துள்ள ப்ரொமோவில், பேய் கதாபாத்திரத்திலிருந்த ஆரவ், ஹரிஷ், ஆரவ், பிந்து இன்று  தேவதையாகவும், தேவதை கதாபாத்திரத்திலிருந்த கணேஷ், சுஜா, சிநேகன் இன்று பேயாகவும் மாறியுள்ளனர். சமீபகாலமாக சிநேகனுக்கும், சுஜாவுக்குமிடையே இருந்து வந்த சண்டை தற்போது, ஆரவுக்கும், சுஜாக்குமாக மாறியுள்ளது. 
 
ப்ரொமோவில், நீ, வா, போ என்று பேசாதீங்க.. மரியாதையாக பேசுங்கள்.. என்று கூறுகிறார் சுஜா, அழைப்பு வந்தவுடன், உள்ளே  இருந்திருக்க கூடாது. ரூல்ஸ்படி வெளியே வந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார் ஆரவ். இவ்வாறு இருவரும் வாக்குவாதம்  செய்கின்றனர்.
 
இதே நிலை தொடர்ந்தால் சுஜா, கணேஷை தவிர மற்ற போட்டியாளர்கள் யாரையும் விட்டுவைக்கமாட்டார் போல் தெரிகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments