Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கர் ராம்சரண் படம் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்கள்… எஸ் ஜே சூர்யா அளித்த பதில்!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (16:44 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “RC 15” படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில் வதந்தி என்ற வெப் சீரிஸின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட எஸ் ஜே சூர்யாவிடம் இந்த படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் “ இந்த படம் பற்றி பேச எனக்கு அனுமதி இல்லை. ஷங்கர் சார் எப்போதுமே தகவல்களை ரகசியமாக வைத்திருப்பார். கண்டிப்பாக வித்தியாசமான ஒரு படமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments