Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவார்த்திகேயனின் 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா'

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (20:15 IST)
கனா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷை ஹீரோயினாக கொண்டு தனது நண்பர் அருண் காமராஜ் இயக்கத்தில் கனா படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். 
 
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரியோவை வைத்து புதிய படம் ஒன்றை புரொடக்ஷன் நம்பர் 2 என்ற பெயரில் சிவகார்த்திகேயன் தயாரித்து வந்தார். 
 
இந்த படத்துக்கு 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' என்று சிவகார்த்திகேயன் பெயர் வைத்துள்ளார். இப்படத்தை ஸ்மைல் சேட்டை யூ டியூப் சேனல் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார். யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சபீர் இசையமைத்துள்ளார். 
 
கதாநாயகியாக ஷெரில் நடிக்க, நாஞ்சில் சம்பத், ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன், யூ டியூப்பில் பிரபலமானவர்களை ஒன்றிணைத்து, இந்தப் படத்துக்காக ஒரு பாடலையும் படமாக்கியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments