Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கிய சிவகார்த்திகேயன் & முருகதாஸ் பட ஷூட்டிங்!

vinoth
செவ்வாய், 16 ஜூலை 2024 (09:26 IST)
ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு சிங்கநடை எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கை முடித்துள்ள முருகதாஸ் இப்போது மீண்டும் சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தூத்துக்குடியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஷூட்டிங் இடைவேளையில்தான் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் கோயில் வழிபாடு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் - காலத்தின் கட்டாயம்!

சூர்யாவின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதிர்பார்த்த அதே தேதி தான்..!

வரலாற்றில் இன்று… இந்திய கிரிக்கெட் ரசிகர்களை யுவ்ராஜ் சிங் மெய்சிலிர்க்க வைத்த நாள் !

ஹெச் வினோத்தைக் கொலை செய்துவிட்டு விஜய்யின் கடைசி படத்தை இயக்க வேண்டும்- பார்த்திபனின் விபரீத ஆசை!

நானே மொதல்ல விமல் ரசிகன்தான்… மேடையில் புகழ்ந்து தள்ளிய விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments