Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேள்பாரி திரைக்கதை தயார்… ஆனா அதை மட்டும் இன்னும் உறுதி செய்யவில்லை- ஷங்கர் தகவல்!

vinoth
வியாழன், 11 ஜூலை 2024 (17:31 IST)
இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கதையை அவர் 1000 கோடி ரூபாயில் மூன்று பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளதாகவும், அதில் பாலிவுட் ஹீரோ ரண்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்தியன் 2 ப்ரமோஷன் பணிகளில் இருக்கும் ஷங்கர் வேள்பாரி குறித்து தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் கொரோனா லாக்டவுன் சமயத்தில் சு வெங்கடேசனின் வேள்பாரி நாவலைப் படித்தேன். உடனே அதை மூன்று பாகங்களாக வரும் திரைக்கதையாக எழுதி முடித்துவிட்டேன். ஆனால் அதில் யாரை நடிக்கவைப்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை” எனக் கூறியுள்ளார். 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகர்களை படத்துக்கு வரவழைக்க முதல் படத்தின் விளம்பரத்திலேயே வித்தியாசம் காட்டிய பார்த்திபன்…!

விஜய்யுடன் ரகசிய அரசியல் வியூகம்.. நடிகர் பார்த்திபன் பதிவால் பரபரப்பு..!

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments