Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்யராஜ் மன்னிப்பு கேட்டே ஆகனும்: வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!

சத்யராஜ் மன்னிப்பு கேட்டே ஆகனும்: வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (16:50 IST)
பாகுபலி-2 படத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டால் தான் அவர் நடித்துள்ள பாகுபலி-2 படம் கர்நாடகாவில் வெளியிட அனுமதிப்போம் என கன்னட அமைப்புகள் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளது.


 
 
பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் பாகுபலி-2 படம் உருவாகியுள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் கடந்த 2008-ஆம் ஆண்டு காவிரி விவகாரத்தில் நடிகர் சத்யராஜ் கன்னடர்களுக்கு எதிராக கூறிய கருத்துக்கு தற்போது மன்னிப்பு கேட்க வேண்டும் என கன்னட அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
 
இதனையடுத்து படத்தின் இயக்குநர் கன்னட அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என பிடிவாதமாக உள்ளனர். சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வெளியிட அனுமதிப்போம் என கூறியுள்ளனர்.
 
இதனையடுத்து சத்யராஜ் மன்னிப்பு கேட்காவிட்டால் வருகிற 28-ஆம் தேதி பெங்களூரில் முழு அடைப்பு நடத்துவோம் என கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார். கர்நாடகாவில் இந்த விவகாரம் பரபரப்பாகியுள்ளதால் பாகுபலி படத்தின் கர்நாடக உரிமை இதுவரை விற்கப்படாமலே உள்ளது.

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments