Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர்களிடம் இருந்து விருதினை பெற மாட்டேன்: அடம் பிடித்த சத்யராஜ்

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (06:30 IST)
சமீபத்தில் விகடன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2'; ஆகிய படங்களில் சிறப்பாக நடித்த நடிகர் சத்யராஜூக்கு சிறந்த குணசித்திர விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை சத்யராஜ் ஒரு பெரிய நடிகரிடம் இருந்து பெறுவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் சத்யராஜோ தனக்கு எந்த நடிகரிடம் இருந்து விருதை பெற விருப்பமில்லை என்றும், உண்மையான சமூக போராளிகள் யாரையாவது தேர்வு செய்து விருதினை கொடுங்கள் என்று கேட்டு கொண்டாராம்.

இதனையடுத்து சத்யராஜின் விருப்பப்படி சமீபத்தில் பெற்றோர் என்றும் பாராமல் தண்டனை வாங்கி கொடுத்த சமூக நீதி போராளி கவுசல்யாசங்கர் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோர்கள் இந்த விருதை சத்யராஜூக்கு கொடுத்தனர். சத்யராஜின் இந்த முடிவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அனிருத் மேஜிக் ஆன் தி வே... விரைவில் விடாமுயற்சி முதல் சிங்கிள்!

தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி வெளியேற மணிரத்னத்தின் கஞ்சத் தனம்தான் காரணமா?

இந்த வயசுலயே இவ்ளோ க்ளாமர் தேவையா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அனிகா!

யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கருணாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஆதார்' படம் மலையாளத்தில் உருவாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments