Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார் எதிரொலி: கே.பாக்யராஜ் திடீர் ராஜினாமா

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (12:55 IST)
இயக்குனர் கே.பாக்யராஜ் திரை எழுத்தாளர் சங்க தலைவர் பதவி இருந்து ராஜினாமா செய்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ராஜினாமாவிற்கு சர்கார் திருட்டு கதை விவகாரம் காரணம் என கூறப்படுகிறது. 
 
சர்கார் கதை திருட்டு கதை என்ற விவகாரத்தை முன்னெடுத்த கே.பாக்யராஜ் இதற்கு ஒரு நல்ல முடிவையும் கொண்டுவந்தார். அதோடு, இந்த விவகாரத்தில் தனக்கு பல காயங்கள் ஏற்பட்டதகாவும் குறிப்பிட்டிருந்தார். 
 
இந்நிலையில், இன்று அதிரடியாக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலைவர் பதவியேற்று 6 மாதங்களே ஆன நிலையில் இவர் இந்த முடிவை எடுத்துள்ளதற்கு சர்கார் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 
அதாவது சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஒன்று என கூறியிருந்ததால் எனக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டது. நான் ஒரு வேலை தேர்தலில் நிற்காமல் தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டதா என தெரியவில்லை. அடுத்து தேர்தல் நடைபெற்றால் கண்டிப்பாக போட்டியிடுவேன். 
 
சர்கார் குறித்து புகார் வந்த போது உண்மையாகவும் நியாமாகவும் முடிவு எடுக்க முடிவு செய்தேன். இதனால் முருகதாஸிடம் கெஞ்சியும் அவர் உடன்படாததால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாக இருக்கும் படத்தின் கதையை கூறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். இது தவறான செயல், இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
 
அதோடு, எனக்கு நடந்த ஒழுங்கீனங்களையும், சிக்கல்களையும் சங்க நலன் கருதி வெளியிட மாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னது ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரி ரிலீஸாகிறதா?

மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் டிக்கெட்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

இந்த வயசில் அந்த ஜானரில் ஒரு படமா?.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

விஜய்யின் ‘சச்சின்’ படத்தின் ரி ரிலீஸோடு மோதும் ரஜினியின் சூப்பர்ஹிட் படம்!

நல்ல விமர்சனங்கள் வந்தும் ஏன் விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ பெரிய வசூல் செய்யவில்லை.. தலைவன் வரலாறு அப்படி!

அடுத்த கட்டுரையில்
Show comments