Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ணன் அனைத்தும் கொடுப்பான்…படம் பார்த்து மிரண்ட சந்தோஷ் நாராயணன் டிவீட்!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (15:55 IST)
தனுஷ் மற்றும் பலர் நடித்துள்ள கர்ணன் படத்தினைப் பார்த்து மிரண்டு போயுள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் காட்சிகள் லாக்டவுனால் பாதிக்கப்பட்டதால் தளர்வுகளுக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடத்தப்பட்டது. இப்போது படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தைப் பார்த்துள்ள இசையமைப்பாளர் அதுபற்றி டிவீட் செய்துள்ளார்.

அதில் ‘கர்ணன் படத்தை பார்த்து மிரண்டு போனேன். தனுஷ், மாரி செல்வராஜ், கலைப்புலி தாணு மற்றும் படக்குழுவினரைப் பார்த்து பெருமைப் படுகிறேன். கர்ணன் – அனைத்தும் கொடுப்பான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments