Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வர் சுந்தரம் படப்பிடிப்பிற்காக துபாய் சென்றுள்ள சந்தானம்

சர்வர் சுந்தரம் படப்பிடிப்பிற்காக துபாய் சென்றுள்ள சந்தானம்

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (15:27 IST)
சந்தானத்தின் தில்லுக்கு துட்டு' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, ஒரு கமர்ஷியல் ஹீரோவாக தன்னுடைய வெற்றி பயணத்தை 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் மூலம் தொடர இருக்கிறார் சந்தானம். இப்படத்தை தயாரிப்பு ஜெ செல்வக்குமார், ஆனந்த் பல்கி இயக்கி வர, மராத்திய நடிகை வைபவி ஷந்திலியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


 
 
இந்நிலையில் இதற்காக துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய 'சர்வர் சுந்தரம்' படக்குழுவினர், சந்தானத்திற்கு துபாய் ரசிகர்கள் கொடுத்த விமர்சையான வரவேற்பால் வியந்து போய் இருக்கின்றனர்... தமிழ் சினிமாவில் சந்தானத்தின் ரசிகர் பலத்தை பற்றி நன்கு அறிவோம், ஆனால் தற்போது துபாயில் கொடுக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட வரவேற்பானது, உலகளவில் உள்ள அவரது எண்ணற்ற ரசிகர்களை பற்றி உணர்த்தி இருக்கிறது. 
 
இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு 'சர்வர் சுந்தரம்' படத்தின் தொழில் நுட்ப பணிகள் ஆரம்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிகரமான கமர்ஷியல் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்' திரைப்படமானது, வர்த்தக உலகில் புதியதொரு சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments