Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானம் அன்புச் செழியன் கூட்டணி… 6 வருடத்துக்குப் பிறகு கம்பேக் கொடுக்கும் இயக்குனர்!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (15:45 IST)
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த குலுகுலு திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

இதையடுத்து உருவாகும் தமிழ் மற்றும் கன்னட படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்குகிறார். சந்தானம் 15 என்ற தற்காலிக தலைப்போடு இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி சத்தமே இல்லாமல் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் சந்தானம் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தை தயாரிப்பாளர் அன்புச்செழியன் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை இந்தியா பாகிஸ்தான் பட இயக்குனர் ஆனந்த் இயக்க உள்ளாராம். முதல் படம் வெளியாகி 6 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை அவர் இயக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments