Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதை மாறிவிட்டது: வருத்தமா? மகிழ்ச்சியா? சமந்தா பதில்...

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (15:12 IST)
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார். இரு மொழிகளிலும் கைவசம் படங்களை வைத்துள்ளார்.
 
திருமணத்திற்கு பிறகு பெரும்பாலன நடிகைகள் சினிமாவிட்டு சற்று விலகஉவர் ஆனால், சமந்தா சற்று வித்தியாசமாக திருமணம் முடிந்த கையோடு படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டர். 
 
அவரது நடிப்பில், இரும்புத்திரை, நடிகையர் திலகம் ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. அதேபோல், சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படங்களிலும் வரிசையில் உள்ளனர். 
 
இந்நிலையில், சமந்தா தனது சினிமா பயணத்தை பற்றி கூறியுள்ளதாவது, நான் சினிமாவுக்கு வந்த புதிதில் மிகவும் பயந்தேன். பாதுகாப்பு இல்லாத உணர்வு ஏற்பட்டது. நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பது, இல்லாவிட்டால் சினிமாவை விட்டு விலகி விடுவது என்று முடிவு செய்து இருந்தேன். 
 
ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு எல்லாமே நல்ல படங்களாக அமைந்தன. என்னை மனதில் வைத்தே டைரக்டர்கள் கதைகளை தயார் செய்து வந்தார்கள். இது உற்சாகத்தை கொடுத்தது. 
 
இப்போது எனது பாதையே மாறிவிட்டது. சொந்த வாழ்க்கையிலும் சினிமாவிலும் சந்தோஷத்தை அனுபவிக்கிறேன். கணவர் குடும்பத்தினர் திருமணத்துக்கு பிறகும் என்னை சுதந்திரமாக விட்டு உள்ளனர். அவர்கள் ஆதரவினால்தான் சினிமாவில் தொடர்ந்து சாதிக்க முடிகிறது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments