Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசை– சமந்தா

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (15:14 IST)
மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார்.


 


சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடப்பது உறுதியாகி விட்டது. எனவே, கையில் உள்ள படங்களை அவசரம் அவசரமாக முடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. தற்போது விஜய் ஜோடியாக அட்லீ இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர், அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார்.

நேற்று முன்தினம் ஃபேஸ்புக் லைவ் மூலம் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்தார் சமந்தா. ‘எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?’ என்ற கேள்விக்குப் பதிலளித்த சமந்தா, “இந்த ஹீரோவுடன் நடிக்க வேண்டும், அந்த ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு கிடையாது. ஆனால், சில இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது கனவு. குறிப்பாக, மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசை” என்றார். திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ள சமந்தா, அடுத்த வருடத்தில் நடிப்பதற்காக 5 படங்களை இதுவரை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

லிங்குசாமி மேல் அதிருப்தியில் கமல்ஹாசன்… காரணம் இதுதானா?

அடுத்த கட்டுரையில்
Show comments