Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமனாருக்கு மண்ட குடைச்சல் கொடுத்த ஜோதிகா - வீண் வம்பை வீட்டுக்கு இழுத்துட்டு வந்த சூர்யா!

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (13:23 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும் திரைபிரபலம் மிக்க பின்னணி குடும்பத்தை சேர்ந்தவருமான நடிகர் சூர்யாவிற்கு விருப்பு வெறுப்பின்றி ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம்  உள்ளனர். மற்ற திரைத்துறை குடும்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிவந்த சூர்யாவின் குடும்பம் மீது பலரின் கண்ணு பட்டுவிட்டது.

ஆம், அப்பாவின் செல்ஃபி விவகாரம் துவங்கி ஜோதிகாவின் தஞ்சை கோவில் விவகாரம் வரை அடுக்கடுக்கான பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது அந்த குடும்பம். இதற்கிடையில் ஆன்லைனில் வெளியாகவிருந்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் திரைப்படத்தை அமேசான் ப்ரைமில் நேரடியாக ரிலீஸ் செய்யக் கூடாது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து  திரையரங்க உரிமையாளர்கள் நடிகர் சூர்யாவிடம் இனி இது போல் செய்யக்கூடாது  என்று வார்னிங் கொடுத்தனராம். ஆனால், அதை ஏற்க மறுத்து சூர்யா அடம்பிடித்ததால்  இனி 2டி தயாரிப்பில் எந்த படம் வந்தாலும் அதை  திரையரங்கில் ரிலிஸ் செய்ய முடியாது என அறிவித்து சூர்யாவின் மொத்த படத்திற்கும்  ரெட் கார்ட் போட்டுள்ளனர். தற்போது  சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று திரைப்படம் சிக்கலில் மாட்டிக்கொண்டது. குடும்பமே ஒருத்தர் ஒருத்தராக வீண் பிரச்னையை வீட்டிற்கு அழைத்து செல்வதால் அப்பா சிவகுமார் மண்டைய பிச்சிகிட்டு டென்ஷனில் இருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறோம்- பிரபல இயக்குனர்கள் அறிவிப்பு!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பேன் இந்தியா படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய பா ரஞ்சித்!

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

கதாநாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமாவும் V J சித்து!

அடுத்த கட்டுரையில்
Show comments