Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் இப்படி ஒரு கதை?… அனிமல் இயக்குனர் பற்றி புகழ்ந்த ரன்பீர் கபூர்!

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (13:12 IST)
விஜய் தேவரகொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அதே படத்தை இந்தியில் ஷாகித் கபூர் நடிப்பில் ரீமேக் செய்து அதிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து அவரின் அடுத்த படமான அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து முடித்துள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்போது இந்த படத்தின் மூன்று மணிநேரம் 21 நிமிடம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனுக்காக சென்னை வந்த படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய படத்தின் கதாநாயகன் ரன்பீர் கபூர் “நான் சந்தித்த இயக்குனர்களில் மிகவும் ஒரிஜினல் ஆனவர் சந்தீப். ஏன் இப்படி ஒரு கதை என்று அவரிடம் கேட்டேன். ஒருவன் தான் அன்பு வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற எந்த எல்லை வரை செல்கிறான்? அவனை செலுத்தும் புள்ளி எது? என்பதுதான் கதை என்றார். சொன்னதை அட்டகாசமாக எடுத்துள்ளார். அனிமல் தங்களுடைய உள்ளுணர்வு சொல்லும்படி செயல்படும். அப்படி ஒருவனின் கதை என்பதால் அனிமல் என்று பெயர் வைத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments