Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெருசா நம்பி பெருசா ஏமாந்த ஈராஸின் அதிரடி முடிவு

Webdunia
செவ்வாய், 26 மே 2015 (19:39 IST)
சூர்யா, ரஜினி என மாஸ் நடிகர்களின் படங்களை பிரமாண்டமாக தயாரித்தும், விநியோகித்தும் பிரமாண்டமாக தோற்றுக் கொண்டிருந்த ஈராஸ் நிறுவனம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

தற்போது அதை செயல்படுத்தியும் இருக்கிறது. சிறியதே அழகு - அதுதான் இப்போது இந்த நிறுவனத்தின் தாரக மந்திரம்.

ஈராஸ் அடுத்து தயாரிக்கும் இரு படங்களும் குறைந்த பட்ஜெட்டில் தயாராகின்றன. நடிப்பதும் சின்ன நடிகர்களே.

ஈராஸின் புதிய படம் ஒன்றுக்கு, எங்கிட்ட மோதாதே என பெயர் வைத்துள்ளனர். நட்டி நட்ராஜ் இதில் நடிக்கிறார். ராமு செல்லப்பா என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இன்னொரு படம், பேரை தேடிய நாள்கள். அசோக் செல்வன் இதன் நாயகன். இயக்கம் அறிமுகமான ஆபிரகாம் பிரபு.

படங்களின் நடிகர் மற்றும் இயக்குனர்களின் பின்னணியைப் பார்த்தால் ஈராஸ் படமா இல்லை திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டின் படமா என்று சந்தேகம் எழும். பெரிய நடிகர்களை வைத்து பெரிதாக பல்பு வாங்குவதற்கு, சிறியது எவ்வளவோ அழகு.

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அல்லு அர்ஜூன் படம் டிராப்.. அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

Show comments