Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ராஸ் போல யதார்த்தமாக இருக்க வேண்டும் - ரஞ்சித்திடம் வேண்டுகோள் வைத்த ரஜினி

Webdunia
திங்கள், 20 ஜூலை 2015 (20:28 IST)
ரஜினியை வைத்து படம் இயக்குவது குறித்து இதுவரை எதுவும் கூறாமலிருந்த இயக்குனர் ரஞ்சித், தான் கலந்து கொண்ட திரைப்பட விருது வழங்கும் விழாவில் படம் குறித்து ஓரிரு தகவல்களை கூறினார்.
 
மெட்ராஸ் படத்தின் கதாபாத்திரங்கள் யதார்த்தமாக இருந்தது போல், எனது படத்திலும் இருக்க வேண்டும் என ரஜினி ரஞ்சித்திடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். இந்தத் தகவலை ரஞ்சித் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். 
 
ரஜினியை வைத்து இயக்கப் போகும் படத்தில் முள்ளும் மலரும் காளியை கொண்டுவர முயற்சி செய்வேன் என்றும் ரஞ்சித் கூறினார்.
 
ரஜினி நடித்தப் படங்களில் நடிப்புக்காக இன்றும் நினைவுகூரப்படுபவை வெகு சொற்பம். அதில் மகேந்திரனின் முள்ளும் மலரும் படமும் ஒன்று. அந்தப் படத்தில் ரஜினி ஏற்று நடித்த காளி கதாபாத்திரம் வித்தியாசமாகவும், யதார்த்தமாகவும் இருக்கும். அதேபோன்ற யதார்த்தமான ரஜினியை ரஞ்சித்தின் படத்தில் எதிர்பார்க்கலாம் என்பதே மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

Show comments