Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் உள்ள பச்சன்களை விசாரித்த ரஜினி!

Webdunia
ஞாயிறு, 12 ஜூலை 2020 (10:34 IST)
நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டதாக தகவல்.  
 
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதாக நேற்று இரவு தகவல்கள் வெளிவந்தன. இதனை அவர் தனது டுவிட்டரில் உறுதி செய்திருந்தார். 
 
மேலும் அமிதாப்பை அடுத்து, அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இதனைத்தொடர்ந்து அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன், அபிஷேக் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பேத்தி ஆராதனா ஆகியோர்களின் கொரோனா முடிவு வெளியாகியுள்ளது. மூவருக்குமே நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. 
 
இந்நிலையில் இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் மிகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால் விரைவில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments