Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவை பார்த்தால் கூப்பிடுபவர் போல் இருக்கின்றதா? பொங்கி எழுந்த ரசிகர்கள்

Webdunia
ஞாயிறு, 24 மார்ச் 2019 (10:03 IST)
நடிகர் ராதாரவி பொதுமேடைகளிலும் சினிமா விழாக்களிலும் பேசும்போது பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 'கொலையுதிர்க்காலம்' திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் விழாவில் நயன்தாரா குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது: அவர் பேசியதாவது:
 
"நயன்தாரா நல்ல ஒரு நடிகை அதில் சந்தேகமே இல்லை. அவர் இத்தனை நாள் தம் கட்டி நடிப்பதே பெரிய விஷயம். அவங்களை பற்றி வராத செய்தியே இல்லை. அதையும் தாண்டி நிக்கிறாங்க. தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வெச்சுப்பாங்க. அப்புறம் மறந்துருவாங்க. ஒருபக்கம் நயன்தாரா பேயாகவும் நடிக்கிறாங்க, இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறாங்க. முன்பெல்லாம் கடவுளாக நடிக்க கே.ஆர்.விஜயாவைத்தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேணும்னாலும் நடிக்கலாம். பார்த்தவுடனே கும்பிடறவங்களையும், பார்த்தவுடனே கூப்பிடுறவங்களையும் கடவுள் வேடத்தில் நடிக்க வைக்குறாங்க' என ராதாரவி பேசினார்.
 
ராதாரவின் இந்த பேச்சுக்கு நயன்தாரா ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நயன்தாராவை பார்த்தால் கூப்பிடுபவர் போல் இருக்கின்றதா? விக்னேஷ் சிவன் இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும்., நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ராதாரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இதே கருத்தை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments