Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா மீது விஜய் பட தயாரிப்பாளர் வழக்கு

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (12:21 IST)
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கிய படம் 'புலி. இந்த படத்தை விஜய்யின் பி.ஆர்.ஓ மற்றும் தயாரிப்பாளருமான பி.டி.செல்வராஜன் தயாரித்திருந்தார். இந்த படமும், இந்த படத்தை அடுத்து இவர் தயாரித்த இன்னொரு படமான 'போக்கிரி ராஜா' படமும் படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு ஒன்று இளையராஜா மீது இன்று மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.

தனது பாடல்களை இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடுபவர்கள் தனக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ள இளையராஜா, அந்த ராயல்டியில் 50% தயாரிப்பாளருக்கு முறையாக தரவில்லை என்றும், பாடல்களுக்கான ராயல்டி தொகையை முறையாக தயாரிப்பாளர்களுக்கு தரக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments