Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பேருந்துகளில் புதுப்படம் - நடிகர் சங்கம் நடவடிக்கை

தனியார் பேருந்துகளில் புதுப்படம் - நடிகர் சங்கம் நடவடிக்கை

Webdunia
புதன், 18 மே 2016 (11:33 IST)
நாசர் தலைமையிலான நிர்வாகிகள் பொறுப்பேற்ற பிறகு நடிகர் சங்கம் பல்வேறு பிரச்சனைகளில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.


 


குறிப்பாக திருட்டு டிவிடிக்கு எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
 
தனியார் பேருந்துகளில் புதுப்படங்கள் திரையிடுவது தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. அதற்கு எதிராக கடும் நடவடிக்கையில் நடிகர் சங்கம் இறங்கியுள்ளது. தெறி படத்தை திரையிட்ட தனியார் தளனியார் பேருந்தை மடக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
 
மனிதன் படத்தை தனியார் பேருந்து ஒன்றில் திரையிடுவதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீமன் தலைமையில் சிலர் அப்பேருந்தை சென்னை மதுரவாயல் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். பிறகு மதுரவாயல் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கும் போடப்பட்டது.
 
மே 20 வெளியாகும் தனது மருது படத்தின் திருட்டு டிவிடி வெளியானால், பார்த்துக் கொண்டிருப்பதில்லை, கடும் நடவடிக்கையில் இறங்குவேன் என்று விஷால் கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments