Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு: ஜெயம் ரவி டுவிட்

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:18 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தன்னுடைய பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக நடிகர் ஜெயம் ரவி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
கடந்த சில மாதங்களாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கி வந்தார் என்பதும் தெரிந்ததே 
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து விட்டதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார் 
 
பொன்னியின் செல்வன் தயாரிக்கும்போதே இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் தயாரிக்கப்பட்டு வந்தது என்றும் ஆனால் அவை பிரித்து ஒவ்வொரு பாகமாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் டைட்டில் கேரக்டரில் நடித்துள்ள ஜெயம் ரவி தற்போது இரண்டு பாகங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments