Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“பொன்னியின் செல்வன் ஷூட்டிங் பற்றி கேட்டு ஷாக் ஆன ராஜமௌலி…” ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (09:15 IST)
இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது.

கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

இதையடுத்து இந்தியா முழுவதும் படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் படம் சம்மந்தமாக ஒரு சுவாரஸ்யமான தகவலை ஜெயம் ரவி பகிர்ந்துள்ளார். இயக்குனர் ராஜமௌலியிடம் இரண்டு பாகங்களையும் சேர்த்து 150 நாட்களுக்குள் படமாக்கி முடித்ததை சொன்ன போது அதைக் கேட்டு அவர் ஆச்சர்யப்பட்டாராம்.

“எப்படி முடித்தீர்கள் அதற்காக எப்படி திட்டமிட்டு வேலை செய்தீர்கள்” போன்ற விஷயங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டார் என ஜெயம் ரவி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments