Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ப்புக்காக அவர் அனுராக் காஷ்யப்புடன் பழகுகிறார் – சொன்னது தப்புதான் என மன்னிப்புக் கேட்ட பாயல் கோஷ்!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (19:52 IST)
பாலிவுட் நடிகை பாயல் கோஷ் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பைக் கிளப்பினார்.

பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் மீது பயல் கோஷ் என்ற நடிகை தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டை வைத்தார். இந்த குற்றச்சாட்டு பாலிவுட்டில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சமீபகாலமாக அனுராக் காஷ்யப் மத்திய அரசை விமர்சித்து வருவதால் அவரின் பெயரைக் கெடுக்கவே இவ்வாறாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக சந்தேகங்கள் எழுந்தன.

இந்நிலையில் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக அவரது முன்னாள் மனைவியும், அவரின் எல்லா படங்களின் எடிட்டருமான ஆர்த்தி பஜாஜ், நடிகை தாப்ஸி பண்ணு, நடிகை ரிச்சா கட்டா மற்றும் நடிகை ராதிகா ஆப்தே ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவருடன் இருக்கும் போது தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருந்ததாகவும் அனுராக் காஷ்யப் மிகவும் நல்ல மனிதர் எனவும் கூறியுள்ளனர்.

இதையடுத்து வாய்ப்புக்காக நடிகை ரிச்சா கட்டா போன்றவர்கள் அனுராக் காஷ்யப்புடன் பழகுகிறார்கள் எனக் கூறியது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து தன் மேல் ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்புவதாக ரிச்சா கட்டா பாயல் கோஷ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இப்போது பாயல் கோஷ் தான் பேசியது தவறு என்றும் அதற்காக மன்னிப்புக் கேட்டு தன் வார்த்தையை திரும்ப பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். இதை நீதிமன்றம் ஏற்றுள்ளது

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்