Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருத்திவீரன் அப்பத்தா மரணம்… கார்த்தி இரங்கல்!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (15:50 IST)
பருத்திவீரன் படத்தின் கார்த்தியின் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் அம்மாள் உயிரிழந்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி கார்த்தி நடிகராக அறிமுகமான பருத்தி வீரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவாஜி கணேசனுக்கு பிறகு முதல் படத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாயகனாக கார்த்தி மாறினார். இந்த படத்தில் நடித்ததற்காக பிரியா மணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தைப் பார்த்து பிரமித்துப் போன பாரதிராஜா ‘என்னை எல்லோரும் கிராமிய இயக்குனர் என்கின்றனர். ஆனால் என்னால் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியவில்லையே என நான் ஆதங்கப்பட்டேன்’ எனக் கூறி பாராட்டினார்.

அந்த படத்தில் நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களுமே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. அப்படி ஒரு கதாபாத்திரம்தான் கார்த்தியின் பாட்டியாக நடித்த பஞ்சவர்ணம் அம்மாளின் கதாபாத்திரம். அவர் இப்போது உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதை தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள கார்த்தி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments