Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பித்தலாட்டம் செய்த பாண்டவர் அணி? – பரபரப்பான தேர்தல் களம்

Webdunia
ஞாயிறு, 23 ஜூன் 2019 (17:55 IST)
இன்று நடிகர் சங்க தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் பாண்டவர் அணியினர் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக சுவாமி சங்கரதாஸ் அணியினர் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் “ஓட்டு விண்ணப்பங்களை ஒரு கவரில் சுருட்டி ஒருவர் எடுத்து சென்றார். அது என்னவென்று தெரியாததால் நான் விசாரித்தேன். அதற்கு அவர் பதில் சொல்லாமல் சென்றுவிட்டார். இதுகுறித்து பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசிடம் இது குறித்து கூறினேன். நாங்கள் உள்ளே சென்று பார்த்தபோது அவர் அதை ஓட்டு பெட்டிக்குள் போட முயற்சித்தார். நாங்கள் அதை கைப்பற்றி நீதிபதியிடம் ஒப்படைத்திருக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஐசரி கணேஷ் “இதுகுறித்து நீதிபதியிடம் புகார் அளித்துள்ளோ. எங்கள் கண்முன் நடந்தது இது. தெரியாமல் இன்னும் என்னவெல்லாம் நடந்தது என தெரியவில்லை. இந்த பித்தலாட்டத்தை செய்ய முயற்சித்தவர் பாண்டவர் அணியை சேர்ந்தவர்” என கூறினார்.

கடைசியாக பேசிய பாக்யராஜ் “தேர்தலை நல்லப்படியாக நடத்தி கொடுத்த காவல்துறைக்கு நன்றி. இன்றைய தேர்தலில் விதிமீறல்கள் நடக்காமல் இல்லை. அதுகுறித்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை பாண்டவர் அணி மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments