Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய ஒளிப்பதிவாளர்

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (21:01 IST)
விஜய் சேதுபதி நடிக்கும் ‘அநீதி கதைகள்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவந்த பி.சி.ஸ்ரீராம், அதிலிருந்து விலகியுள்ளார்.


 
 
எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், கதை தனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே ஒளிப்பதிவு செய்ய ஒப்புக் கொள்வார் பி.சி.ஸ்ரீராம். அதேபோல், சின்ன நடிகர் என்றும் பார்க்க மாட்டார்.

அதனால் தான், கடந்த எட்டு வருடங்களில் 6 படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்துள்ளார். அவருடைய ஒளிப்பதிவில் 2015 ஆம் ஆண்டு ‘ஓ காதல் கண்மணி’ படமும், 2016ஆம் ஆண்டு ‘ரெமோ’ படமும் ரிலீஸானது.அதன்பிறகு, ‘ஆரண்ய காண்டம்’ தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் ‘அநீதி கதைகள்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வந்தார்.

ஆனால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனதால், பாதியில் இருந்தே இந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளார் பி.சி.ஸ்ரீராம். ’24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தில், ஃபஹத் ஃபாசில் ஹீரோவாக நடிக்கிறார்.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments