Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணைய விமர்சனம் - கடுப்படித்த சுஹாசினி

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2015 (13:17 IST)
ஓ காதல் கண்மணி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மணிரத்னத்தின் மனைவி என்ற முறையில் சுஹாசினியும் கலந்து கொண்டார். அவருக்கு என்ன கோபமோ. இணையத்தில் விமர்சனகம் எழுதுகிறவர்களை ஒரு பிடிபிடித்தார்.
 

 
ஒரு படத்தை விமர்சிக்கிற தகுதி பத்திரிகையாளர்களுக்கு மட்டும்தான் உண்டு. ஆனால், சோஷியல் மீடியாவில் மவுசை நகர்த்த தெரிந்தவர்கள் எல்லாம் விமர்சனம் எழுதுகிறார்கள். இதை பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தடுக்க வேண்டும். விமர்சனம் எழுதுகிற தகுதியும் உரிமையும் உங்களுக்குதான் உண்டு என்றார்.
 
ஆனால், மணிரத்னமோ, முன்பு டீக்கடையில் படத்தைப் பற்றி விமர்சனம் செய்தார்கள். நானும், பி.சி.ஸ்ரீராமும்கூட குட்டிச் சுவரில் உட்கார்ந்து, யாருக்குமே படம் எடுக்க தெரியலை என்று விமர்சித்திருக்கிறோம். இப்போது ஜனங்களுக்கு ஒரு தளம் கிடைத்திருக்கிறது. அதில் அவர்கள் தங்களின் கருத்தை கூறுகிறார்கள். அதை தடுக்க முடியாது என்றார்.
 
ம்... ஒரு கலைஞனுக்கும், கலைஞனின் மனைவிக்கும்தான் எத்தனை வித்தியாசம்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments