Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் வெளியாகும் விக்ரம்-சூர்யா திரைப்படங்கள்

Webdunia
சனி, 13 ஏப்ரல் 2019 (19:18 IST)
இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸானால் இருதரப்பு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படும் என்பது தெரிந்ததே. சமீபத்தில் பொங்கல் தினத்தில் ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' வெளியாகியபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இந்த நிலையில் வரும் மே 31ஆம் தேதி சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள 'என்.ஜி.கே. திரைப்படம் ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதே மே 31ஆம் தேதி விக்ரம் நடித்துள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படமும் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த தேதியை விட்டால் அத்துடன் கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்பதால் வேறு வழியில்லாமல் இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஒரே நாளில் ரிலீஸாகி 'பேட்ட', விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றது போல் என்.ஜி.கே மற்றும் கடாரம் கொண்டான் ஆகிய படங்களும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

இயற்கை சீற்றத்துக்கு மத்தியில் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments