Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமி பாலியல் வன்கொடுமை; நாகினி புகழ் நடிகர் கைது!

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (12:15 IST)
பிரபலமான நாகினி சின்னத்திரை நாடக நடிகர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2013ம் ஆண்டில் தில் கி நசர் சே கூப்சூரத் என்ற இந்தி நாடகம் மூலம் அறிமுகமானவர் பேர்ல் வி பூரி. பல்வேறு இந்தி நாடகங்களில் நடித்துள்ள இவர் நாகின் என்ற இந்தி நாடகத்தின் 3வது பாகத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 17 வயது சிறுமி ஒருவரை நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி வி பூரியும், அவர்களது நண்பர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமி மற்றும் அவரது தாய் அளித்த புகாரின் பேரில் வி பூரி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நாகினி சீரியலில் நடித்து வரும் நடிகை அனிதா ஹசானந்தனி, தனக்கு வி பூரியை நன்றாக தெரியும் என்றும், அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர் அல்ல. உண்மை விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

திடீரென மொட்டையடித்த ‘காதல்’ பட நடிகை.. சாமியாராக போகிறாரா?

கோட் படத்தில் டி ஏஜிங் பணிகளில் தாமதம்… ரிலீஸ் பாதிப்பா?

முதல் படத்தை முடிக்கும் முன்னே இன்னொன்னா?… டிடிஎஃப் வாசனின் அடுத்த பட டைட்டில்!

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

அடுத்த கட்டுரையில்