Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சலின் சென்னை ஓப்பனிங் வசூல் ரூ.7 கோடி: தமிழிசைக்கு நன்றி தெரிவித்த ரசிகர்கள்

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2017 (10:17 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியான போது முதல் இரண்டு நாட்கள் நல்ல வசூலை கொடுத்தது. ஆனால் மூன்றாவது நாள் வெள்ளிக்கிழமை படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனம் காரணமாக கொஞ்சம் கூட்டம் குறைய தொடங்கியதால் தயாரிப்பு தரப்பு அதிர்ச்சி அடைந்தது.



 
 
இந்த நிலையில் தமிழிசை செளந்திரராஜன், எச்.ராஜா புண்ணியத்தில் வெள்ளி மாலையே மீண்டும் ஹவுஸ்புல் ஆனது. அடுத்ததாக சனி, ஞாயிறு  இரண்டு நாட்களும் சிறப்பு காட்சிகள் உள்பட அனைத்து காட்சிகளிலும் வசூலை வாரி இறைத்தது. போதாக்குறைக்கு ராகுல்காந்தி உள்பட தேசிய தலைவர்களும் பேச ஆரம்பித்துவிட்டதால் இன்னும் ஒரு வாரத்திற்கு படத்தின் வசூல் பிரம்மாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
 
சென்னையில் மட்டும் இந்த படம் ஒப்பனிங் வசூலாக அதாவது புதன் முதல் ஞாயிறு வரை ரூ.6,83,68,108 வசூல் செய்துள்ளது. சுமார் ரூ.7 கோடியை நெருங்கிவிட்ட இந்த படத்தின் வசூல் அடுத்த வாரத்திற்குள் ரூ.10 கோடியை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த அபார வசூலுக்கு காரணமான தமிழிசைக்கு விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

தனுஷின் ‘ராயன்’ படத்தின் செகண்ட் சிங்கிள்.. ஏஆர் ரஹ்மானிடம் இருந்து ஒரு கானா பாடலா?

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் நாயகி நயன்தாராவா? அடிச்சுவிடும் நெட்டிசன்கள்..!

கற்றது தமிழ் படத்தால் எனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம்… கருணாஸ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments