Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கில் மெர்சல் வெளியாவில்லை; தயாரிப்பு தரப்பில் விளக்கம்

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (10:53 IST)
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளிடையே தீபாவளியன்று வெளியானது மெர்சல் திரைப்படம். படம் வெளியான பிறகும் சர்ச்சைகளுக்கிடையே படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 
மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பான ‘அதிரிந்தி’ இன்று வெளியாக இருந்த நிலையில், படம் வெளியாகாது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் வரும் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா வசனங்களுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து  அக்காட்சிகளை நீக்குமாறு கூறி வந்தனர் பாஜகவினர். இந்நிலையில் மெர்சலின் தெலுங்கு பதிப்பான அதிரிந்திக்கும் சென்சார் சான்று கிடைக்காததால் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது. சென்சார் சான்று கிடைப்பதில் பாஜக பிரச்சனை  செய்வதாகவும் கூறப்படுகிறது.

 
இந்நிலையில் அதிரிந்தியில் வரும் வசனங்கள் மற்றும் காட்சிகள் நீக்கப்பட்டதாகவும், மியூட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுவதில் உண்மை இல்லை. அதிரிந்தி விரைவில் ரிலீஸாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தன்னால் பட்ட நஷ்டத்துக்காக லைகா நிறுவனத்துக்குக் கைகொடுக்கிறாரா ரஜினி?

நானியின் படத்தில் இணைந்த கார்த்தி… அடுத்த பாகத்தில் அவர்தான் ஹீரோவா?

நாமளே ஒரு AI தான்.. நமக்கெதுக்கு இன்னொரு AI – இளையராஜா கருத்து!

மைல்கல் வசூலை எட்டிய விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’!

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

அடுத்த கட்டுரையில்
Show comments