Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரி செல்வராஜின் ‘பைசன்- காளமாடன்’ ஷூட்டிங் நிறைவு!

vinoth
செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (07:03 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.  அதே நாளில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. படத்துக்கு பைசன் காளமாடன் எனத் தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக மாரி செல்வராஜோடு கூடட்ணி அமைத்துள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா. படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள சொல்வதில்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

உண்மையா உழைச்சா கூட நிப்போம்னு… டிராகன் வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்த அஸ்வத் மாரிமுத்து!

மிஷ்கின் அப்படி பேசியதற்காக நான் போன் பண்ணி திட்டினேன்… பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!

அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தி படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார்?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படம் பற்றி வெளியான முக்கிய அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments