Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200 பேர்களுடன் வெள்ளத்தில் சிக்கிய தனுஷ் பட நாயகி! அதிரடி நடவடிக்கை எடுத்த முதல்வர்

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (21:50 IST)
தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படத்தின் நாயகியும் பிரபல மலையாள நடிகையுமான மஞ்சுவாரியர் இமாச்சல பிரதேசத்தில் சுமார் 200 பேர்களுடன் வெள்ளத்தில் சிக்கி கொண்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது
 
நடிகை மஞ்சுவாரியர் 'கயிற்றம்' என்ற மலையாளபடத்தின் படப்பிடிப்பிற்காக '-இமாச்சல பிரதேசம் சென்றிருந்தார். சிம்லாவில் இருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்ரு என்ற இடத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது திடீரென பெய்த கனமழையால் அந்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மஞ்சுவாரியர் உள்பட படப்பிடிப்பு குழுவினர் சுமார் 200 பேர் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர்.
 
இதனையடுத்து மஞ்சுவாரியர் தனது சகோதரர் மதுவாரியருக்கு செல்போன் மூலம் நிலைமையை தெரிவித்தார். மதுவாரியர் பாஜகவில் செல்வாக்குள்ளவர் என்பதால் அவர் உடனடியாக இமாச்சல் பிரதேச முதல் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றதாகவும் இமாச்சல பிரதேச முதல்வர் வெள்ளத்தில் சிக்கிய மஞ்சுவாரியர் உள்ளிட்டவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. விரைவில் மஞ்சுவாரியரும் படகுழுவினர்களும் கேரளா திரும்பிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments