Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேரியில் தோழிகளை சம்பாதித்த மனிஷா யாதவ்

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2015 (15:28 IST)
இன்றைய இளம் நடிகைகள், கதாபாத்திரம் வலுவாக இருந்தால் எந்த வேடத்தையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். இது திரைத்துறையின் ஆரோக்கியமான அம்சம். காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக சேரியில் வாழும் பெண்ணாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதேபோலொரு வேடத்தை செய்திருக்கிறார் மனிஷா யாதவ்.
ஒரு குப்பை கதை படத்தில் மனிஷா நாயகி. வால்பாறையைச் சேர்ந்த இவர் சென்னை கார்ப்பரேஷனில் வேலை பார்ப்பவரை திருமணம் செய்து சென்னை சேரி ஒன்றில் வாழ வருகிறார். அங்கு நடக்கும் எதிர்பாராத சம்பவம்தான் கதை.
 
இந்தப் படத்துக்காக சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய சேரியில் 40 நாள்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்த காலத்தில் அங்குள்ள சிலரை தோழியாக்கிக் கொண்டதாகவும், அவர்களின் வரவேற்பும், அன்பும் மனம் நெகிழச் செய்ததாகவும் மனிஷா கூறினார்.
 
மிகச்சிறந்த ஸ்கிரிப்ட் என்பதாலேயே, ஒரு குப்பை கதை படத்தில் நடித்ததாகவும் அவர் கூறினார்.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments