Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட, மணிரத்னம் நன்றி எல்லாம் சொல்றாருப்பா

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (09:36 IST)
மீடியாவின் பக்கமே தலைகாட்டாத மணிரத்னத்தை, ஓ காதல் கண்மணி நிறையவே மாற்றியிருக்கிறது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தாராளமாகவே பேசினார். தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு பேட்டி தந்தார். டாக் ஷோ நிகழ்ச்சியில் ரஹ்மான், வைரமுத்து, துல்கர் சல்மான் ஆகியோருடன் கலந்து கொண்டார்.
 
உச்சபட்சமாக, படத்தின் வெற்றிக்கு ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
 
அன்பு மற்றும் வெறித்தனத்துடன் நீங்கள் வெளியிட்டுள்ள விமர்சனங்களுக்கு நன்றி. இத்தனை வருட எனது கலைப்பயணத்தில் நீங்களும் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள். இனி வரும் காலங்களிலும் நீங்கள் தொடர்ந்து உங்கள் அன்பையும், ஆதரவையும் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என அந்தக் கடிதத்தில் மணிரத்னம் குறிப்பிட்டுள்ளார்.
 
மணிரத்னம் நன்றிக் கடிதம் எழுதுவது இதுதான் முதல்முறை என்பதே ஆச்சரியத்துக்கு காரணம்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments