Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போஸ்டர் அடிக்கற செலவை துயர் துடைக்க தந்திருக்கலாம். காங்கிரசுக்கு கஸ்தூரி கண்டனம்

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (17:22 IST)
சாத்தான்குளம் பகுதியில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் மிகப்பெரிய கொடூரம் என்றால் அதை வைத்து அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளின் கொடூரம் தாங்க முடியாத அளவிற்கு உள்ளது. இந்த பிரச்சனையை காரணமாக வைத்து எந்த அளவுக்கு அரசியல் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருவதாக கூறப்படுகிறதே
 
இந்த நிலையில் ’சாத்தான்குளத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் நாடார் மற்றும் பெளிக்ஸ் நாடார் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற இன்று வருகை தருகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள்’ என்று ஒரு போஸ்டர் சாத்தான்குளம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளது 
 
இந்த போஸ்டரில் வசந்தகுமார், விஜயதாரணி உட்பட ஒரு சிலரின் புகைப்படங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இந்த போஸ்டர் குறித்து தனது டுவிட்டரில் கருத்து கூறிய நடிகை கஸ்தூரி ’போஸ்டர் அடிக்கிற செலவை துயர் துடைக்க கொடுத்து இருக்கலாம்’ என்றும் ’காமராஜர் படத்தோடு நாடார் என்று போட்டு ஜாதி அரசியல் வேறு’ என்றும் குறிப்பிட்டுள்ளார் மேலும் இந்த போஸ்டரில் காணும் பெரிய மனிதர்கள் பணக்காரர்கள் கொரோனா தடுப்பு பணிக்கு எவ்வளவு கொடுத்தார்கள்’ என்று கேள்வி எழுப்பி உள்ளார் கஸ்தூரியின் இந்த டூவிட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments