Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய் படத்தில் மூன்று முன்னணி நடிகைகள்

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (10:30 IST)
நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள 'பலூன்' திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ள நிலையில் ஜெய் நடிக்கவுள்ள அடுத்த படத்தை 'எத்தன்' இயக்குனர் சுரேஷ் இயக்கவுள்ளார்.
 
பாம்புகளை அடிப்படையாக கொண்டு 'நீயா' பாணியில் உருவாகவுள்ள இந்த படத்தில் வரலட்சுமி, ராய்லட்சுமி, கேதரின் தெரஸா ஆகிய மூன்று முன்னணி நடிகைகள் நடிக்கின்றனர். மூவருமே பாம்பு கேரக்டர்களில் நடிப்பதாக கூறப்படுகிறது
 
ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியராக ஜெய் இந்த படத்தில் நடிப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கும் என்றும் இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார். முதல்முறையாக ஜெய் படத்தில் மூன்று முன்னணி நடிகைகள் நடிப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments