Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கோல் சரியான இடத்துக்கு திரும்ப வந்துள்ளது: இசைஞானி இளையராஜா

Webdunia
ஞாயிறு, 28 மே 2023 (07:45 IST)
செங்கோல் சரியான இடத்திற்கு திரும்ப வந்துள்ளது என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். 
 
இன்று புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்படவிருக்கும் நிலையில் நேற்று தர்மபுரி ஆதீனம் செங்கோலை பிரதமர் மோடி இடம் அளித்தார். இதுகுறித்து இசைஞானி இளையராஜா தனது சமூக வலைதளத்தில் கூறிய போது ’பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு தனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்
 
ஒரு குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்பு விழாவை மகிழ்ச்சியுடனும் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று கூறிய இளையராஜா குறுகிய காலத்தில் கட்டி  முடிக்க துணை புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். 
 
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உலகம் புதிய இந்தியாவை கொண்டாடி வருகிறது என்று கூறிய இளையராஜா இந்த தருணத்தில் புதிய கொள்கைகள் முடிவு எடுப்பதற்காக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதற்கு நான் மனமார பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார் 
 
செங்கோல் என்பது பழங்கால தமிழர்களின் கலாச்சார மற்றும் பெருமை என்று கூறிய இளையராஜா அரச குடும்பத்தினர் செங்கோலை ஏந்தி வெற்றிகரமான ஆட்சி செய்தனர் என்றும் நீதி, ஒழுங்கு, நேர்மை மற்றும் நெறிமுறைகளின் அடையாளமாக போற்றினர் என்றும் கூறினார். இத்தகைய செங்கோல் தற்போது சரியான இடத்திற்கு திரும்ப வந்திருப்பது தனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments