Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சர்கார்' படத்தின் கதை திருடப்பட்டதா?

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (17:34 IST)
பெரிய நடிகர்களின் படங்கள் குறிப்பாக விஜய் படங்கள் பிரச்சனைகளை சந்திக்காமல் சமீபகாலமாக வெளியானதாக சரித்திரம் இல்லை. ஆரம்பத்தில் இருந்தோ அல்லது கடைசி நேரத்திலோ ஏதாவது ஒரு பிரச்சனை, வழக்கு என விஜய் படத்திற்கு தடை கேட்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை வருண் ராஜேந்திரன் என்பவர் எழுதிய 'செங்கோல்' என்ற கதையின் காப்பி என்று தென்னிந்திய திரைக்கதை ஆசிரியர்களின் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சர்கார் படத்தின் கதை அப்படியே இந்த 'செங்கோல்' கதையின் மறுவடிவமாக இருப்பதாகவும் இதுகுறித்து வழக்கு தொடரவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் 'சர்கார்' படத்தின் டீசர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments