Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!

vinoth
சனி, 6 ஏப்ரல் 2024 (07:43 IST)
ரவிகுமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் மற்றும் மியார் ஜார்ஜ் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் இன்று நேற்று நாளை. தமிழில் அதிகம் வராத டைம் டிராவல் வகையில் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் அந்த படத்தின் பார்ட் 2 எடுக்க விரும்பிய தயாரிப்பாளர் சி வி குமார் இயக்குனர் ரவிக்குமாரை கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள சொன்னார். அவரின் இணை இயக்குனர் எஸ் பி கார்த்திக் அந்த படத்தை இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு பூஜையும் போடப்பட்டது.

ஆனால் படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது இக்லூ படத்தை இயக்கிய பரத் மோகன் இயக்கத்தில் இன்று நேற்று நாளை 2 படத்தினை தொடங்கியுள்ளார் தயாரிப்பாளர் சி வி குமார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவது யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.  இதே போல பீட்சா படத்தின் நான்காம் பாகத்தையும் தொடங்கியுள்ளார்.  இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments