Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரக்கன்று நட்டு பிறந்தநாளை கொண்டாடிய இளையராஜா

Webdunia
திங்கள், 2 ஜூன் 2014 (19:31 IST)
பொதுவாக பிறந்தநாள் கொண்டாடாத இளையராஜா இன்று தனது 71 -வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடினார்.
இன்று காலை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவின் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.

தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம், இயக்குனர்கள் பாலா, பார்த்திபன், எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். 


 
 
இளையராஜாவுக்கு இது 71 -வது பிறந்தநாள் என்பதால் தமிழகம் முழுவதும் 71,000 மரக்கன்றுகள் நடுவதற்கு இளையராஜா ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

இளையராஜா மரக்கன்று ஒன்றை நட்டு இதனை தொடங்கி வைத்தார். 

 
 

விழாவில் வார இதழில் தொடராக வந்த இளையராஜாவின் கேள்விப் பதில்கள் தொகுப்பான இளையராஜாவை கேளுங்கள் புத்தகமும், திருப்பாவை பள்ளி எழுச்சிப் பாடல்களும் வெளியிடப்பட்டன. 
 
பாலா வெளியிட்ட இவற்றை பஞ்சு அருணாசலமும், எஸ்.ராமகிருஷ்ணனும் பெற்றுக் கொண்டனர்.





 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments