Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் லிங்குசாமி மேல் புகார் கொடுத்த தயாரிப்பாளர்… தெலுங்கு படத்துக்கு முட்டுக்கட்டையா?

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (15:55 IST)
இயக்குனர் லிங்குசாமி தனக்கு இயக்கித் தரவேண்டிய படத்தை முதலில் இயக்கித்தர வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் ஞானவேல் ராஜா.

இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்திலேனியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அஞ்சான் படத்தின் தோல்விக்குப் பிறகு லிங்குசாமியால் அடுத்தடுத்து படங்கள் இயக்க முடியவில்லை. அதுபோலவே அவர் தயாரித்த உத்தம வில்லன் திரைப்படமும் அட்டர் ப்ளாப் ஆனதால் பொருளாதார ரீதியாகவும் சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

இந்நிலையில் அதையெல்லாம் சமாளிக்க இப்போது தெலுங்கு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் அவர் தனக்கு படத்தை இயக்கி தராமல் தெலுங்கு படத்தை இயக்கக் கூடாது என ஸ்டுடியோ கிரீன் நிறுவனர் ஞானவேல் ராஜா புகார் கொடுத்துள்ளாராம். உத்தம வில்லன் பட வெளியீட்டின் போது லிங்குசாமிக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்தார் ஞானவேல். அதற்கு பிரதிகாரமாக லிங்குசாமி ஞானவேல் ராஜாவுக்கு படம் இயக்கி தர வேண்டும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் லிங்குசாமிக்கு எந்த முன்னணி நடிகரும் வாய்ப்பளிக்கவில்லை என்பதால் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments